பாக்கியலட்சுமி சீரியலில் மினிஸ்டர் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு வரமாட்டார் என கோபி மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் கடைசியில் கோபியின் மூக்கை உடைக்கும் வகையில் மினிஸ்டர் அந்த இடத்திற்கு வந்தார். இதை பார்த்து கோபி அதிர்ச்சியானார். இப்படி இருக்கையில் இந்த வார எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கோபி பாக்கியாவின் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சென்றதை அறிந்து ராதிகா கோபப்படுகிறார்.
அதுமட்டுமல்லாமல் அவரை ரூமுக்குள் வைத்து அடி நொறுக்குகிறார். இதை இனியா வெளியே நின்று கேட்டுவிட்டு ஈஸ்வரிடம் போய் சொல்லிக் கொடுக்கிறார். பின் அங்கு வரும் ராதிகாவிடம் எப்படி நீ என் பையன் கூட சண்டை போடலாம் என ஈஸ்வரி கேட்கிறார். உடனே நீங்களும் மாமாவும் சண்டை போடுவதை விட நாங்க கம்மியா தான் போடுறோம். உங்கள மாதிரி நான் கோபி கிட்ட சண்ட போட மாட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நிற்கிறார். மேலும் ராதிகா பேசியதை பார்த்து செல்வி, பாக்கியா இருவரும் ஷாக் ஆகின்றனர்.