நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதனால் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீட் தேர்வில் விண்ணப்பிப்பதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அதனை மேலும் நீட்டிக்குமாறு பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது அதன்படி வரும் மார்ச் 16ஆம் தேதி இரவு 10:50 மணி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இதற்கான தேர்வுகள் மே 5ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.