பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இனியாவுக்கும் ராதிகாவுக்கும் ஒரு பக்கம் சண்டை முட்ட கோபி சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். இன்னொரு பக்கம் பாக்யாவை எப்படியாவது கேண்டினை விட்டு விரட்ட வேண்டும் என ராதிகா பல சதி வேலைகளை செய்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் இந்த கேண்டினை நடத்த வேண்டும் என்றால் வேலை பார்க்கும் அனைத்து பெண்களும் சுடிதார் போட வேண்டும் என கண்டிஷன் போடுகிறார். இதனால் பாக்கியா அடுத்து என்ன செய்யப் போகிறோம் என யோசிக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ராதிகா கேண்டினை வந்து பார்க்க அங்கு யாருமே இல்லை.
இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்யும் விஷ்ணு விஷால்? அவரே வெளியிட்ட பதிவு!!
அப்போது சுடிதார் போட சொன்னதால் யாருமே வரல என சந்தோஷப்பட, வேலை பார்க்கும் பெண்கள் சுடிதாருடன் மாஸாக என்ட்ரி கொடுக்கின்றனர். செல்வியும் சுடிதார் போட்டுக் கொண்டு ராதிகாவை கலாய்க்கிறார். அப்போது ராதிகா எங்க உங்க ஓனரம்மா வரலையா என கேட்க பாக்கியா சுடிதாருடன் வருகிறார். இதை பார்த்து வாயடைத்து போன ராதிகாவிடம் அடுத்து எங்களை விரட்ட என்ன பிளான் இருக்குனு யோசிங்க என நக்கல் அடிக்கிறார் பாக்கியா.