உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம், பிரதமர் மோடி முன்னிலையில் வெகுவிமரிசையாக அண்மையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு விதமான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்களை அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பக்தர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
PKL 2024: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!