இன்றைய காலகட்டத்தில் ஒரே நாளில் மூன்று அல்லது 4 திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் காஷ்மோரா படத்தை இயக்கிய கோகுல் தற்போது ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கி உள்ளார். அதேபோல் அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில், பா ரஞ்சித் தயாரித்துள்ள படம் தான் ப்ளூ ஸ்டார். இதில் அசோக்செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த இரண்டு திரைப்படங்கள் நேற்று (ஜனவரி 25) வெளியாகின.
தற்போது இந்த படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் இரண்டு கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரூபாய் 80 லட்சம் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.