தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வந்தவர் தான் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரணி. புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று தனது 47 வயதில் இறந்தார். இந்த நிலையில் இவரின் மறைவிற்கு நடிகர் வடிவேலு தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார் .
அதில், அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரணி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு 47 வயசு பொண்ணு இவ்வளவு சீக்கிரமா கடவுள் கிட்ட போயிடுச்சே என கதறி அழுதேன் என்றார். பவதாரணி சாதாரண குழந்தை அல்ல அது ஒரு தெய்வ குழந்தை அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலக தமிழர்கள் அனைவருமே இன்னைக்கு ரொம்ப நொறுங்கி போயிருப்பாங்க என குறி தனது கருத்தை முடித்துள்ளார்.