ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், உலகின் முன்னணி வீரர்களுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
ஆஸ்திரேலியாவில் 2023 ம் ஆண்டின் முதல் ஓபன் டென்னிஸ் தொடர், கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஜீவன், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில், சானியா மிர்சா பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து இந்த தொடரில் விளையாடினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர்கள், நேற்று பெல்ஜியம் மற்றும் உக்ரைன் வீராங்கனைகளை எதிர்த்து போட்டியிட்டனர். இந்த போட்டியில், 1-2 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா ஜோடி தோல்வியை தழுவியது, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. ஆனால், இந்த ஓபன் டென்னிஸில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் ஸ்ரீ ராம் பாலாஜி அதிக கவனத்தை ஈர்த்து உள்ளனர்.
அர்ஜுன் டெண்டுல்கர் தான் அதிர்ஷ்டசாலி…, சர்பராஸ் கானின் சிறு வயது நினைவை பகிர்ந்த தந்தை!!
அதாவது, இந்த ஓபன் டென்னிஸின் முதல் சுற்றில், குரோஷியா மற்றும் அமெரிக்க வீரர்களை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர்கள், 2-1 என்ற செட் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். இதையடுத்து, பிரான்ஸ் வீரர்களுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2 வது சுற்றில் இந்திய வீரர்கள் (4-6, 4-6) என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இவர்கள் தோல்வியை தழுவினாலும், உலகின் முன்னணி வீரர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றனர்.