கொரோனா காலத்தில் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 129 டாலராக கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளின் விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டு இருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் பொதுமக்கள் இந்த விலையேற்றத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் எண்ணெய் நிறுவனங்கள் தாமாகவே முன் வந்து விலையை உயர்த்தாமல் இருந்தனர். மேலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சிலிண்டருக்கான மானிய தொகை ரூ.22,000 கோடியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை.
தமிழகம் அல்ல தமிழ்நாடு தான்., நிலைப்பாட்டை டோட்டலாக மாற்றிய ஆளுநர்.., அவரே வெளியிட்ட பதிவு!!
இதனால் தான் கச்சா எண்ணெய் விலை 82 டாலருக்கு குறைந்த போதிலும் கடந்த 8 மாதமாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார். மேலும் பழைய இழப்புகளை ஈடு செய்த பின்னரே பெட்ரோல் டீசல் விலை மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.