முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரில், தொடர்ந்து அதிகமாக வரும் விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எலான் மஸ்க் அதிரடி முடிவு ஒன்று எடுக்க உள்ளார்.
திடீர் முடிவு:
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், கடந்தாண்டு twitter நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். இவர் கைக்கு அதிகாரம் மாறியதிலிருந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை தொடர்ந்து எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில், ப்ளூடிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்களின் ட்விட்டரில் வரும் விளம்பரங்களை பாதியாக குறைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அடுத்த ஆண்டுக்குள் இதனை முழுவதுமாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ட்விட்டரில், நீண்ட நேரம் அதிகமாக வரும் விளம்பரங்களை முற்றிலுமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பொதுமக்களே கவனம்.., இதுக்காகத்தான் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.., அமைச்சர் ஓபன் டாக்!!!
வரும் வாரங்களில் இந்த 2 சிக்கலுக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அதிரடி முடிவை பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள் வரவேற்றுள்ளனர்.