ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அருமையாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
சானியா – போபண்ணா
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 16-ம் தேதி முதல் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் சானியா – போபண்ணா ஜோடி, பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை எதிர்கொண்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த இரு ஜோடிகளுக்கு இடையிலான கடுமையான ஆட்டத்தில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் இந்தியாவின் சானியா – போபண்ணா ஜோடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் ICC யின் சிறந்த டி-20 Award.., யாருக்கு கிடைத்தது தெரியுமா???
அதே போன்று மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஓ. கடெக்கி, எம். போல்மன்ஸ் ஜோடி, பிரேசிலின் எல். ஸ்டெபானி, ஆர். மாடோஸ் ஜோடியை எதிர்த்து விளையாடி வருகின்றனர். இந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெரும் ஜோடி இந்திய அணியுடன் மோத உள்ளனர்.