ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (ஜனவரி 9) இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 147 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 34 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 29 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி ஆகியோர் பொறுப்பாக விளையாடி அசத்தினர். இதை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டியதால் ஆஸ்திரேலியா அணி 18.4 ஓவர் முடிவில் 149 ரன்களை குவித்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
தமிழக குடும்ப தலைவிகளே., மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வந்திருச்சா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!