தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் “கலைஞர் மகளிர்” திட்டம், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியானவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தாலும், பண்டிகை உள்ளிட்ட சில காலங்களில் முன்கூட்டியே உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் இன்னும் 5 தினங்களில் (ஜன. 15) பொங்கல் பண்டிகை வர உள்ளதால், ஜனவரி 10ஆம் தேதி (இன்று) தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை வரவு வைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது உரிமை தொகை வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசும் இன்றே வழங்கப்படுவதால் பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
TNPSC “குரூப் 1” தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இப்போவே இத செய்யணும்? முக்கிய அப்டேட்!!!