ஆஸ்திரேலியா A அணி அசத்தல் பந்துவீச்சு – இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறல்!!

0

ஆஸ்திரேலியாவில் 3 நாட்கள் நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கான பிங்க் நிற பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடியாமல் இந்திய அணி வீரர்கள் தற்போது திணறி வருகின்றனர். துவக்க பேட்ஸ்மேன் அனைவரும் வெறும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வருகின்றனர்.

பயிற்சி ஆட்டம்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான பிங்க் நிற பால் பயன்படுத்தப்பட்டு ஆட்டங்கள் நடைபெறும். இந்த போட்டிகள் இன்று துவங்கியது. சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலியா ஏ அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகின்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றது. துவக்க பேட்ஸ்மேன்களான மயாங்க் அகர்வால் மற்றும் பிருத்வி ஷா களம் இறங்கினர். இதில் அதிர்ச்சிகரமான மயாங்க் அகர்வால் 2 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருக்கு பின்பாக சுப்மன் கில் களம் இறங்கினார். அவர் பிருத்வி ஷாவுடன் இணைந்து இருவரும் நன்றாக விளையாடினார்கள். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து 40 ரன்கள் மற்றும் 43 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

‘இந்தியாவின் செஸ் நாயகன்’ – விஸ்வநாதன் ஆனந்த் பிறந்ததினம் இன்று!!

இவர்களை அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தனர். ஆஸ்திரேலியா அணியில் உள்ள அனைத்து பந்து வீச்சாளர்களும் வெறித்தனமாக விளையாடி இந்திய அணியினை துவம்சம் செய்துள்ளனர். இதனை அடுத்து இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்து விளையாடி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here