Wednesday, April 17, 2024

ஏழைகளுக்கு பசி ஆற்றிய உத்தமர் – ‘ஷாந்தி சோசியல் சர்வீஸ் சுப்பிரமணியம்’ மரணம்!!

Must Read

கோவையில் முகத்தையும் காட்டாமல் முகவரியும் தெரியாமல் பல ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் பசியாற்றிய பிரபல தனியார் அமைப்பு சாந்தி சோசியல் சர்வீஸின் அறங்காவலர் சுப்பிரமணியன் இன்று காலமானார்.

ஏழைகளின் உணவகம்:

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்து கொண்டிருக்கும் தனியார் அமைப்பு ‘சாந்தி சோஷியல் சர்வீஸ்’ நிறுவனம். அங்கு மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய் மட்டுமே, மருந்தகங்களில் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டது ஏழை மக்களுக்கு பெரும் உதவியாய் இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அம்மா உணவகம் வந்த பின்பு பல ஏழைகளின் பசியை குறைந்த செலவில் ஆற்றியது. ஆனால், அம்மா உணவகத்திற்கு முன்பாகவே கோவையில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற நிறுவனம் சமூகப்பணியை செய்து வருகிறது. தரத்திலும் சுவையிலும் பிரபல ஓட்டல்களுக்கு சவால் விடும் இந்த அமைப்பு. அதே நேரத்தில் இவ்வளவு தரமான உணவுகளை குறைந்த விலையிலும் மற்ற ஓட்டல்கள் தர முடியாது என்பதே உண்மை.

ஜிஎஸ்டி வரி:

மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்த ஜிஎஸ்டி வரியை வாடிக்கையாளர்கள் மீது செலுத்தியது மற்ற உணவகங்கள் . ஆனால் இந்த அமைப்பு தானே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. தற்போது ஜிஎஸ்டி காரணமாக அனைத்து நிறுவனங்களும் விலை ஏற்றம் அறிவித்துள்ள நிலையில் இந்த நிறுவனம் மற்றும் விலைகுறைப்பு நடவடிக்கை எடுத்தது அனைவரின் பாராட்டத்தையும் பெற்றது.

ஆஸ்திரேலியா A அணி அசத்தல் பந்துவீச்சு – இந்தியா அணி பேட்ஸ்மேன்கள் திணறல்!!

இதுகுறித்து சாந்தி சோசியல் சர்வீஸ் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, “எங்கள் எம்.டி கூறியதால் விலையில் மாற்றம் அறிவித்தோம்” என்று கூறினர். அத்தகைய பெருமைக்குள்ளன அறங்காவலர் சுப்பிரமணியன் அவர்களை பேட்டி எடுக்க பல பத்திரிகைகளும் முயற்சி எடுத்து முடியவில்லை. இவ்வளவு நன்மைகள் செய்த சுப்பிரமணியன் அவர்கள் இன்று காலமானார் என்பது கோவை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -