உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றனர். அதன் படி நேற்று தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 85 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதைத்தொடர்ந்து இந்திய அணி இன்று தனது முதல் இன்னிங்ஸில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது ஆஸ்திரேலியா அணியில் வலுவான நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளன. இது ரோகித் சர்மாவுக்கு நன்கு தெரிந்த விஷயம் தான்.
தமிழக மக்களே., செல்போன்ல இத மட்டும் டச் பண்ணிடாதீங்க? அப்புறம் அவ்ளோதா!!!
ஆனாலும் அவர் பந்து வீச்சில் அஸ்வினுக்கு பதில் ஜடேஜாவை தேர்வு செய்தது மிகவும் தவறான ஒன்று. ஏனென்றால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ஜடேஜாவை விட அஸ்வின் தான் மிகப்பெரிய சவாலாக இருந்து ரன் குவிக்க விடாமல் டஃப் கொடுத்திருப்பார். ஆனால் வெற்றியை எளிதாக அடையக்கூடிய வழி தெரிந்தும் அதை ரோகித் சர்மா தன் அறியாமையால் தவற விட்டுள்ளதாக ரிக்கி பாண்டிங் கூறி வருகிறார்.