ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மீனாக்ஷி, ஜப்பான் வீராங்கனையிடம் போராடி தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 1ம் தேதி முதல் ஜோர்டானின் அம்மனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக அரங்கேறியது. இதில், இன்று ஒரே நாளில் மட்டும் ஆடவருக்கான 48, 75, 92+ உள்ளிட்ட எடை பிரிவுகளில் இந்திய வீரர்கள் 4 வெண்கல பதக்கங்களை அள்ளி குவிந்திருந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து, மகளிருக்கான 52 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாக்ஷி இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தார். இவர் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் கினோஷிதா ரிங்காவை எதிர்த்து போட்டியிட்டர். இவருடன், கடுமையாக போராடிய மீனாக்ஷி 1-4 என்ற கணக்கில் தங்கப் பதக்கத்தை எட்ட தவறினார்.
இதனால், மீனாக்ஷி இந்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். நாளை, 75 மற்றும் 81 கிலோ எடை பிரிவில், ஒலிம்பிக் நாயகி லவ்லினா போர் கோஹெய்ன் மற்றும் ஆல்பியா பதான் இறுதி போட்டியில் மோத உள்ளன. இந்த போட்டியில் இவர்கள் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.