தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் லிஸ்டில் முதன்மை இடத்தில் இருப்பவர் தான் தான் நடிகர் ஜெய். 90ஸ் காலத்து இளசுகளின் கனவு நாயகனும் நம்ம ஜெய் தான். பகவதி படத்தில் தளபதிக்கு தம்பியாக நடித்து அசத்தினார்.
பார்க்க அப்படியே விஜய் போலவே இருப்பதால் தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு சென்னை-28 படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். ஓரளவுக்கு அவரது சினிமா கெரியர் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.
இவரை தூக்கி நிறுத்திய படம் என்றால் அது எங்கேயும் எப்போதும் தான். தனது அப்பாவித்தனமான நடிப்பால் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த படத்தில் இருந்து தான் ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து வந்ததாக வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இப்பொழுது 5 படங்களுக்கு மேல் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.