எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்.., கடைசி நேரத்தில் ஜனனி செய்த காரியம்!!

0
எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்.., கடைசி நேரத்தில் ஜனனி செய்த காரியம்!!
எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்.., கடைசி நேரத்தில் ஜனனி செய்த காரியம்!!

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குந்தவையை சக்திக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் சொத்து மேலும் பெருகும், ஜனனியின் ஆட்டமும் அடங்கும் என்று மனக்கணக்கு போட்டு கொண்டிருக்கிறார் குணசேகரன். குந்தவையை ஊருக்கு அனுப்புவது போல நடித்து பெரிய பிளான் ஒன்றை போட்டுள்ளார்.

வாசு எப்படியும் போலீசை அழைத்து வருவார் என்று குணசேகருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவசரமாக அவர்களை அனுப்பி வைத்துள்ளார். மேலும் கோவிலில் வைத்து சக்திக்கும் குந்தவைக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து விட்டார் குணசேகரன்.

ஜனனியிடம் குணசேகரன் வீட்டு மாடியில் இருக்கும் அப்பத்தா பல விஷயங்களை சொல்வது போன்று நேற்று எபிசோடு முடிவடைந்தது. எனவே இவர்களின் திருமணத்தை கண்டிப்பாக ஜனனியிடம் சொல்லி இருப்பார். அடுத்த படியாக கண்டிப்பாக ஜனனி திருமணத்தை நிறுத்த போராடுவார். அப்படி இல்லையென்றால் உண்மை தெரிந்து குந்தவையே கல்யாணத்தை நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இனிமேல் தான் எபிசோடு சூடுபிடிக்க போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here