#INDvsENG டெஸ்ட் – 3,400 ஓவர்களுக்கு பின்பு நோ பால் வீசிய அஸ்வின்!!

0

நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது டெஸ்ட் போட்டியை துவக்கினர். இரண்டாம் நாளான இன்று அஸ்வின் தனது 38வது ஓவரின் 2 வது பந்தில் நோ பால் வீசினர். இதன் மூலம் 3,400 ஓவர்களுக்கு பின்பு அஸ்வின் நோ பால் வீசியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மிக பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் தனது இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தற்போது இந்த போட்டியில் அஸ்வின் ஓர் நோ பால் போட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் தனது 38வது ஓவரின் 2 வது பந்தில் நோ பாலை வீசினார். முந்தைய காலத்தில் நோ பாலை கள நடுவர்கள் கவனித்து வருவார்கள். ஆனால் தற்போது 3வது நடுவர் கவனித்து வருகிறார்கள். தற்போது அஸ்வின் வீசிய இந்த நோ பால் மூலம் பல நாள் சாதனை தற்போது தகர்ந்துள்ளது. அவர் வீசிய கடந்த 3,400 ஓவர்கள் கழித்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ பாலை வீசியுள்ளார்.

சன்னி லியோன் மீது பணமோசடி புகார் – கேரளாவில் பரபரப்பு!!

இதன்மூலம் நோ பால் வீசாமல் அதிக பந்துகளை வீசியவர் என்ற சாதனைக்கு தற்போது அஸ்வின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னை டெஸ்டுக்கு முன்பாக 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 20,391 பந்துகளை வீசியுள்ளார். தற்போது டெஸ்ட் போட்டியில் நோ பால் வீசாமல் அதிக பந்துகளை வீசியவர் என்கிற சாதனை இங்கிலாந்தின் க்ரீம் ஸ்வானிடம் சென்றுள்ளது. இவர் நோ பால் வீசாமல் 15,349 பந்துகளை வீசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here