ஆண்டுதோறும் முக்கிய விசேஷ நாட்களில் தமிழ் கடவுள் முருகனுக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். அதன் படி மிகவும் விசேஷமான தைப்பூச திருநாள் நாளை மறுநாள் (பிப்ரவரி 5) வர உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் தரிசனம் செய்ய செல்வார்கள். இதையடுத்து திருத்தணி செல்லும் பக்தர்களின் பயண வசதிக்காக பிப்ரவரி 4ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி பிப்ரவரி 4ம் தேதி,காலை 10.23 மணிக்கு அரக்கோணம் to திருத்தணி, காலை 10.45 மணிக்கு திருத்தணி to அரக்கோணம், காலை 11.13 மணிக்கு அரக்கோணம் to திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதே போன்று பிப்ரவரி 5ம் தேதி, மதியம் 12.58 மணிக்கு அரக்கோணம் to திருத்தணி,
மதியம் 13.20 மணிக்கு திருத்தணி to அரக்கோணம், மதியம் 13.48 மணிக்கு அரக்கோணம் to திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி, மதியம் 12.58 மணிக்கு அரக்கோணம் to திருத்தணி, மதியம் 13.20 மணிக்கு திருத்தணி to அரக்கோணம், மதியம் 13.48 மணிக்கு அரக்கோணம் to திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் இதேபோல் மயிலாடுதுறை to பழனி மற்றும் பழனி to மயிலாடுதுறை வழியாக 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்றும் தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.