தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை வழங்கி வருகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதேபோல் சமீபத்தில் தொடர் மழை காரணமாக சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!
தற்போது இதை ஈடுசெய்யும் விதமாக நாளை (பிப்ரவரி 4) உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை விடுமுறை எனவும் கூறியுள்ளார்.