கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 47 வது திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக இயக்குனர் தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஏஆர் ரஹ்மான் இசை
கடந்த 2010 ம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சிறந்த காதல் திரைப்படம் ”விண்ணைத்தான்டி வருவாயா”. சிம்பு மற்றும் திரிஷா நடித்திருந்த இப்படம் அனைத்து தர ரசிகர்களையும் கவர்ந்த ஒரு காதல் காவியம் என்றே கூறலாம். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் பின்னணி பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைவரின் இதயத்தில் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கும் கீதமாகும். தொடர்ந்து கெளதம் மேனன், சிம்பு கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படம் வெளியானது. இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடலா?? – மத்திய அரசு விளக்கம்!!
இந்நிலையில் இம்மூவரின் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 47 வது படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூருகையில், ‘உலக மக்களுக்கு, இதை மீண்டும் சாத்தியப்படுத்தியதற்கு நன்றி. மறுபடியும் ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் தயாராகிறது அடுத்த இசை. நாங்கள் உண்மையாக இதை நம்புகிறோம் . சிலம்பரசனுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
Dear Universe, Thank you for making this possible.
It’s @arrahman ‘s music & his Aura that will light up our lives once again in our next collaboration.
We truly believe in that.
Thankfully- @SilambarasanTR_
& myself. @IshariKGanesh @VelsFilmIntl #HBDSilambarasanTR— Gauthamvasudevmenon (@menongautham) February 3, 2021