இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 30 ஆண்டு கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் இசைக் கச்சேரிகளை நடத்த இருக்கிறார். அந்த வகையில், முதல் இசை நிகழ்ச்சி சென்னையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மழை காரணமாக இந்நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி இன்னொரு நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து செப்டம்பர் 10 ஆம் தேதி இசை நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.