இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ம் தேதி விடுமுறை….,அறிவிப்பை பாருங்கள்…,

0
இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ம் தேதி விடுமுறை....,அறிவிப்பை பாருங்கள்...,
இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ம் தேதி விடுமுறை....,அறிவிப்பை பாருங்கள்...,

கேரளாவில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக நீலகிரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி, ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here