தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை குறித்து, அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் வருத்தம் :
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த வருபவர் ஏ.ஆர்.ரகுமான். 2ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு காலகட்டத்தில், இவரது தேதியை வாங்கிச் செல்ல பல பாலிவுட் ஸ்டார்கள் தவம் கிடந்தனர். ஆனால், இப்போது அவருக்கான மவுசு பாலிவுட்டில் வெகுவாக குறைந்துள்ளது. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும், ஜவான் படத்தில் முதலில் ஏ ஆர் ரகுமானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால், தற்போது இந்த படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். இவ்வாறு பாலிவுட்டில் ஏ ஆர் ரகுமானுக்கான மதிப்பு, குறைந்து கொண்டே வந்தாலும் தமிழ் சினிமா இவரை கொண்டாடி வருகிறது. அண்மையில் உருவான கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும், ஆஸ்கர் நாயகனே இசையமைத்துள்ளார். பாலிவுட் உள்ளிட்ட எந்த சினிமா இவரை தள்ளினாலும், தமிழ் சினிமா இவரை தலையில் வைத்துக் கொண்டாடும் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.