இந்தியாவில் வாக்காளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் ஓட்டளிக்கும் புதிய வசதி விரைவில் வரக்கூடிய தேர்தல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதற்கென பிரத்யேக தொழில்நுட்பத்தை இந்திய தேர்தல் ஆணையம், சென்னை ஐஐடி மாணவர்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது. இதனால் வரக்கூடிய தேர்தல்களில் வாக்களிப்பு சதவீதம் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளாக் செயின் தொழில்நுட்பம்..!
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதியிலும், எந்த நேரத்திலும், எந்த டிவைஸ் மூலமும் ஓட்டளிக்க முடியும். மேலும் இந்த தொழில்நுட்பம் Block chain மூலம் உருவாக்கப்பட உள்ளது. இதனால் இதன் தரவுகள் மிகப் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இதில் வெப் கேம், பயோமெட்ரிக் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் வாக்காளர் விபரங்கள் சரிபார்க்கபடும். அதன் பிறகு இ-பாலட் பேப்பர் தோன்றும். அதில் ஓட்டளித்த பிறகு பாலட் பேப்பர் பத்திரமாக பதிவு செய்யப்பட்டு அது பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |