தமிழில் பாடகி மற்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஆங்காங்கே கிழிந்த உடையில் ஏணியின் மீது சாய்ந்த படி போஸ் கொடுத்து உள்ளார்.
பாடல் பாடுவதை பிரதான தொழிலாக கொண்டு சினிமாவில் நுழைந்தவர் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் படத்தில் கதாநாயகியாகும் சான்ஸ். அதாவது இவர் கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தாலும், அவருக்கு கதாநாயகியாக நடிக்க கிடைத்த முதல் வாய்ப்பு பச்சைக்கிளி முத்துச்சரம் தான். இந்த படத்திற்கு தொடர்ந்து 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்தார்.
அந்த படமும் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்களில் கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். மேலும் அவரின் குரலில் அமைந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒன்று. மேலும் இவர் தனது திரை வாழ்க்கை மட்டுமல்லாமல் சொந்த வாழ்விலும் பல சர்ச்சைகளை சந்தித்தார். இதனால் உடலாலும் மனதாலும் பாதிக்கபட்ட இவர், சிறிது காலம் சினிமா பக்கம் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் இவர் மீண்டும் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சோசியல் மீடியாவை விட்டும் விலகி இருந்த இவர் தற்போது சமீபகாலமாக தற்போது தனது ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஏணியில் முட்டுக்கொடுத்து நின்றபடி ஆங்காங்கே கிழிந்த ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்