தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் வரிசையாக தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். தற்போது அந்த வகையில் விஜய் டிவியின் முன்னாள் பிரபல தொகுப்பாளர் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.
தடுப்பூசி:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் அதிகமாக இருந்து வருகிறது. எனவே திரை உலகினர் நலன் கருதி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் வருகிற மே மாதம் 31ம் தேதி வரை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கடின சூழலில் இருந்து அனைவரும் மீள தற்போது தடுப்பூசி பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது அந்த வகையில் தொடக்க காலத்தில் விஜய் டிவியில் கொடிகட்டி பறந்த பிரபலம் ஒருவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இவர் தொடக்க காலத்தில் விஜய் டிவியில் இருந்தார் பின்பு சன் டிவி மற்றும் ஜீ தமிழ் என்று இந்த இரு சேனல்களில் தற்போது பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் தான் தொகுப்பாளர்கள் அனைவருக்கும் சீனியர் என்றே சொல்லலாம். அவர் வேறு யாரும் இல்லை அவர் தான் தீபக்.
கொரோனாவால் விஜய் டிவியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல் – ஷாக்கில் இல்லத்தரசிகள்!!’
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தீபக்கை பார்த்து தான் தனக்கும் தொகுப்பாளராக ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று நடிகர் சிவகார்த்திகேயன் ஓர் விருது நிகழ்ச்சியில் கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த அளவிற்கு தீபக் பல இளைஞர்ளுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரது பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். தற்போது இவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். அதற்கான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.