நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து பால் பாக்கெட்டுகளை மக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். சமீபகாலமாக மாநிலங்கள் தோறும் பால் தட்டுப்பாடு ஏற்படுவதால் பாலின் விலை உயர்வும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் குஜராத் அமுல் பால் நிறுவனம் இன்று (03.02.2023) முதல் லிட்டருக்கு 3 ரூ. விலை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பால் அமுல் தாசா லிட்டருக்கு ரூ.54, அமுல் பசும்பால் லிட்டருக்கு ரூ.56, அமுல் கோல்ட் லிட்டருக்கு ரூ.66, அமுல் ஏ2 எருமைப்பால் லிட்டருக்கு ரூ.70 எனவும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கால்நடை விவசாயிகளும் விலையை உயர்த்தி உள்ளதால் தான் பால் விலையை அதிகரித்துள்ளதாக அமுல் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் லிட்டருக்கு ரூ.2 என பால் விலை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.