அம்பன் புயல் அவ்ளோதான் – வலுவிழந்து கரையைக் கடக்கும் என தகவல்..!

0

வங்கக்கடலில் அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்று இருந்த அம்பன் புயல் வலுவிழந்து அதி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அம்பன் புயல்:

நேற்று மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூப்பர் புயலாக வலுப்பெற்று இருந்தது அம்பன் புயல். இது வட கிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. பொதுவாக புயல் கரையைக் கடக்கும் போது வலுவிழக்கும் தன்மை கொண்டிருக்கும் ஆனால் அம்பன் புயல் அவ்வாறு வலுவிலக்காது என கூறப்பட்டது. ஆனால் சூப்பர் புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறி உள்ளதால் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தற்போது கொல்கத்தாவில் தென் மேற்கே 7,000 கிமீ தொலைவில் மேற்கு மத்திய கடல் பகுதிகளில் நிலைகொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் எனவும் இதனால் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். எனவே அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here