தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அது மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.
புதிய அட்டவணை:
தமிழகத்தில் 10ம் வகுப்பு அனைத்து பாடங்கள், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பாடங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு பட்டியல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 15 நாட்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு காலையில் நடைபெறும் எனவும் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை:
- ஜூன் 15 – மொழிப்பாடம்
- ஜூன் 17 – ஆங்கிலம்
- ஜூன் 19 – கணக்கு
- ஜூன் 20 – விருப்ப மொழிப்பாடம்
- ஜூன் 22 – அறிவியல்
- ஜூன் 24 – சமூக அறிவியல்
- ஜூன் 25 – தொழிற்பாடம்
- 11ம் வகுப்பிற்கு விடுபட்ட தேர்வு ஜூன் 16ம் தேதி நடைபெறும்.
- 12ம் வகுப்பிற்கு விடுபட்ட தேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |