தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக உதயமாகும் சீரியல் குறித்து அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது
புது சீரியல்கள்:
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை மட்டும் கிட்டத்தட்ட 50 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பத்துக்கும் மேற்பட்ட சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஈடு செய்யும் விதமாக அனைத்து தொலைக்காட்சிகளும் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்ப உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் புதிதாக உதயமாகும் சீரியல் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதன் படி பார்க்கையில் பிரபலமான சன் டிவியில் மூன்று புது சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான ஷபானா நடிக்கும் “ஜோடி” சீரியலும், நடிகர் அருணி மற்றும் ப்ரித்வி சர்மா நடிக்கும் “சக்தி” சீரியலும் மற்றும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா நடிக்க இருக்கும் சீரியலும் ஒளிபரப்பாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஜி தமிழ் டிவியில் நான்கு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
90 நடிகை ஊர்வசியின் இரண்டாவது கணவர் இவர் தானா? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!
அதாவது இந்திரா, கார்த்திகை தீபம், கனா மற்றும் மிட்டாய் கொட்டி சிட்டம்மா போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா பார்ட் 2 , சிறகடிக்க ஆசை, பொன்னி போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.