எஸ்பி ஐ மூலம், குடும்ப ஓய்வூதியம் பெரும் பயனர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் சூப்பர் அப்டேட் ஒன்றை வங்கி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூப்பர் அப்டேட் :
அரசு மற்றும் தனியார் துறைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்த தொகையை பெற சம்பந்தப்பட்டவர்கள், தங்கள் ஆயுள் காப்பீட்டு சான்றிதழை வருடம் தோறும் புதுப்பிப்பது அவசியம். இதற்காக பயனர்கள், குறிப்பிட்ட நாளில் வங்கி முன் கிடையாய் கிடக்க நேரிடும். தற்போது, இதற்கான மாற்று வழியை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
மழை காலத்தில் “இதையெல்லாம்” சாப்பிட கூடாது.,, மீறினால் பாதிப்பு உங்களுக்குத்தான்!!
அதாவது குடும்ப ஓய்வூதிய பயனர்கள் வீட்டில் இருந்தபடியே, தங்கள் ஆயுள் காப்பீட்டு சான்றிதழை சமர்ப்பிக்க புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது. இதற்காக, பயனர்கள் “SBI பென்ஷன் சேவா” என்ற மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த சேவையை பெற வாடிக்கையாளர் இந்திய நாட்டுக்குள் வசிக்க வேண்டும். இதுபோக அவர்கள் ஆதார் அட்டை தங்கள் ஓய்வூதிய கணக்குடன் நிச்சயம் இணைத்திருக்க வேண்டும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பின், பயனர்கள் வீடியோ கால் மற்றும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். மேற்கண்ட வழிமுறைகளுடன், இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுவதுமாக படித்து வாடிக்கையாளர்கள் பயனடைந்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே எந்தவித அலைச்சலும் இல்லாமல் சமர்ப்பித்துக் கொள்ளலாம்.
Video Life Certificates with an ease. Now even family pensioners can avail the services via the SBI Pension Seva Mobile App or website.
Visit https://t.co/Mor15ERNpf to know more.#SBI #AmritMahotsav #PensionSeva #VideoLifeCertificate pic.twitter.com/p0gvlK7GP1— State Bank of India (@TheOfficialSBI) November 7, 2022