நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் வேலை என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் நடப்பு 2023-24ஆம் நிதியாண்டில் கடைசி நாள் (மார்ச் 31) ஞாயிற்றுக்கிழமை வருவதால், வங்கிகள் மூடி இருக்குமா? என பலரும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், “2023-24ஆம் நிதியாண்டு தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளை கணக்கில் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, வரும் மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வங்கிகளும், அரசு தொடர்பான வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளும் செயல்பட வேண்டும். இது தொடர்பான விவரங்களை விளம்பரங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
பள்ளி மாணவர்களே., இந்த தேதி முதல் தான் கோடை விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!!