சன் டிவி இனியா சீரியல் நடிக்கும் ஆலியா மானசா தனக்கு, விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி பரபரப்பு போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
ஆலியா மானசா பதிவு :
விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியல் ஜோடிகளில் ஒன்று ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்து பின்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆலியா மானசா நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தன் காதல் கணவர் சஞ்சீவுடன் சேர்ந்து, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு இருந்தபடி புத்தாண்டு கொண்டாட்டங்களை நிகழ்த்தினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன்பிறகு, தற்போது மீண்டும் சீரியலில் பிஸியாகி உள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஆலியா மானசாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட, பரபரப்பு போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில், அவரே பகிர்ந்துள்ளார்.
அதாவது எதிர்பாராமல் தனக்கு விபத்து நடந்ததாகவும், காலில் கட்டு போட்டு உள்ளதாகவும் சோகத்துடன் பதிவிட்டுள்ளார். விரைவில் இதிலிருந்து மீண்டு வர எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்து ஆலியாவின் ரசிகர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.