புத்தாண்டு பண்டிகை இன்னும் சில தினங்களில் வர இருப்பதால், ஜியோ உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் ஆஃபரை அறிவித்து வருகிறது. அந்த வகையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் New Year ஆஃபரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் CEO கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக அவர் கூறுகையில், “இனி வரும் காலங்களில் ரீசார்ஜ் கட்டண உயர்வு இருக்கும் என்பதால், முதல் படியை ஏர்டெல் எடுத்து வைக்க இருக்கிறது. இதுபோல் மற்ற டெலிகாம் நிறுவனங்களும் உயர்த்தவில்லை என்றால் திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார். இது பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களே.., இது குறித்து கவலை வேண்டாம்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!