கொரோனவை தொடர்ந்து ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் – முதன்முறையாக இந்தியாவில் 2500 பன்றிகள் பலி..!

0

இந்தியாவில் முதல்முறையாக ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அசாம் மாநிலத்தில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ வைரஸிற்கு 306 கிராமங்களில் இருந்து இதுவரைக்கும் 2,500 பன்றிகள் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

சீனாவில் இருந்து பரவியது..!

அசாமில் பன்றிகள் உயிரிழப்பிற்கு காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பரவியதாகும். இதன் தாக்கம் முதன்முதலில் அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. இதற்கும் கொரோனா வைரஸிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த வைரஸ் மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொன்று வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாக இந்த வைரஸால் 2500 பன்றிகள் இதுவரை அசாமில் உயிரிழந்து உள்ளன. இதனால் பன்றிகளை அழிக்காமல் அவற்றை பாதுகாக்க நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வைரஸ் தாக்கம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பன்றிகள் வெளியில் செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இருப்பினும் ஆரோக்கியமாக இருக்கும் பன்றி இறைச்சியை சாப்பிட எந்த ஒரு தடையும் அங்கு விதிக்கப்படவில்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here