பொங்கல் பரிசாக குடிமகன்களுக்கு வழங்கப்படும் பணம் டாஸ்மாக் வழியாக மீண்டும் அரசுக்கே வந்து சேரும், அரசின் காசு எங்கும் போகாது, அரசுக்கே வந்து சேரும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசின் காசு அரசுக்கே:
நேற்று திண்டுக்கல் மாவட்டம் கோம்பயன்பட்டியில் தமிழக அரசின் புதிய திட்டமான மினி கிளினிக் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர். திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்து பேசினார். அப்போது கூட்டத்திலிருந்த தொண்டர் ஒருவர் குடிபோதையில் எழுந்து தனக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான கூப்பன் இன்னும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதற்கு பதிலளித்த அமைச்சர், “டாஸ்மாக்கோட எவ்வளவு கொடுமையா போச்சு பாருங்க, எப்படியெல்லாம் கேள்வி கேக்குறாங்க? இவருக்கு கொடுக்கப்படற பொங்கல்பரிசுப்பணம் டாஸ்மாக் மூலமா நமக்கு தான் திருப்பி வரும், அரசின் காசு அரசுக்கே வரும், வேற எங்கயும் போகாது. அரிசி, பருப்பு, வெட்டி சேலை வெல்லம்,, கரும்பெல்லாம் இவர் மனைவிக்கு போய்டும், கரும்பை பாதி விலைக்கு விக்க முடியாது” என்று கூறினார். ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.