காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் வரும் சசிகலா – போலீசார் குவிப்பு!!

0

தற்போது சிறையில் இருந்து விடுபட்ட நிலையில் சசிகலா இன்று பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். அவர் வரும் காரில் அதிமுக கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா:

சொத்துக்குவிப்பு வழக்கிறகாக கடந்த 2017ம் ஆண்டு சசிகலா பெங்களூரு அக்ரஹார பகுதி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவரது சிறை தண்டனையின் காலம் கடந்த 27ம் தேதி அன்று முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் சசிகலா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் அவர் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தீவிர சிகிச்சையை மருத்துவமனையில் சசிகலா மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்த படியே கடந்த 27ம் தேதி அன்று விடுதலை பெற்றார். பின்பு உடல் நலம் சரியானதால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களுருவில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் அவர் இன்று தமிழகம் வரவுள்ளதாக தினகரன் ஏற்கனவே அறிவித்த்திருந்தார்.

இன்ஸ்டாவில் 15 மில்லியன் பாலோவர்ஸை பெற்று அசத்திய சமந்தா – குவியும் வாழ்த்துக்கள்!!

மீண்டும் சர்ச்சை:

இதற்கிடையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இல்லத்திற்கும் திரும்பும் போது அவரது காரில் அதிமுக கொடி பறக்கவிடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் போலீசில் புகாரும் அளித்துள்ளனர். தற்போது இன்று தமிழகத்திற்கு வரும் சசிகலா, அதிமுக கொடி பறக்கும் காரில் தான் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை வரவேற்க அமமுக தொண்டர்கள் மேளதாளத்துடன் காத்திருக்கின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here