தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது வரை மட்டுமே கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு 2024-25-ஆம் கல்வி ஆண்டில் பல புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளனர். அதாவது ஸ்மார்ட் வகுப்பறை, உயர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆய்வகங்கள், விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கான வகுப்புகள் போன்றவற்றை கொண்டு வர உள்ளனர். மேலும் ஆங்கில மொழியை சரளமாக பேசவும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இனி பல துறைகளில் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன அந்த இடத்தில் டச் பண்ணாங்க.., சொல்லவே ரொம்ப கஷ்டமா இருக்கு.., பிரபல நடிகை ஓபன் டாக்!!!