இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி பறப்பவர் தான் நடிகை டாப்ஸி. இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் குறித்த ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
5, 8, 9 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திடீர் குழப்பம்.., உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!
அதில், நடிகை டாப்சி முன்னாள் பேட்மிண்டன் வீரர் மத்யாஸ் போ என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் டாப்சியும், மத்யாஸ் போவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த மார்ச் 23ம் தேதி இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதை அறிந்த ரசிகர்கள் நடிகை டாப்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.