நடிகர் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷெரின். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த ஷெரினுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் சரியத் தொடங்கின. இருப்பினும் ஒரு வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்று தற்போது வரை முயற்சி செய்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது தான் அவருக்கு பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.. அந்த ஷோவின் மூலம் நல்ல ரீச்சை பெற்ற ஷெரின் குக் வித் கோமாளி சீசன் 4 ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ்க்கு வந்ததன் காரணம் குறித்து பேசியுள்ளார்.
‘ஏய் இந்தம்மா’.., எதிர்நீச்சல் குணசேகரனின் சொந்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
அதில், நடிகை ஷெரின் தனது நீண்ட நாள் காதலனை விட்டு பிரிந்து தினமும் அழுது துடித்து வந்துள்ளாராம். அப்போது அவர் நிம்மதியை தேடி அந்த காதலனின் நினைவை மறக்க வேண்டும் என்று நினைத்த போது தான் பிக்பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் அந்த காதலனை அவர் கொஞ்சம் கொஞ்சமாக மறந்ததாக கூறியுள்ளார். சொல்ல போனால் பிக்பாஸ்க்கு பிறகு தனது வாழ்க்கையை மாறியதாக கூறியுள்ளார்.