நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது தெலுங்கு சினிமாவில் படு பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்பொழுது தனக்கு எல்லாமே ரசிகர்கள் தான் என்று தெரிவித்திருந்தார். மேலும் என்னுடைய லைஃப்ல நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இனி என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு நான் வந்துவிட்டேன் என்று விவாகரத்து குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்.
சேலை அப்டி இருக்கா.., இல்ல நீங்க அப்படி இருக்கீங்களா?? இளசுகளின் மனசை திருடும் ரேஷ்மா!!
இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர், இப்போதெல்லாம் ஒல்லியாக இருக்கீங்க, கோட் சூட் அணியிருங்கீங்க, கண்ணாடி போடுறீங்க, இனிமேல் இப்படித்தான் இருப்பீங்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சமந்தா, தற்போது எனக்கு கிடைத்திருக்கும் பெஸ்ட் friend என்றால் அது கண்ணாடி தான் ” என கூறி இருக்கிறார்.
Glasses are my new best friend ??#Shaakuntalam https://t.co/X9151BOZx2
— Samantha (@Samanthaprabhu2) April 9, 2023