தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வருமானம் ஈட்டுவதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
வருமானம் ஈட்டும் திட்டம்
தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் பொது மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறைகள் அனைத்தும் தற்போது நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்மாட் கார்டுகள், கண் கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட விஷயங்கள் கிட்டத்தட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கிடையில், ரேஷன் கடைகளுக்கு வருமானம் ஈட்டுவதற்கான சூப்பர் திட்டம் ஒன்றை தமிழக அரசு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரேஷன் கடைகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் லாரிகளை அரசுடைமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வரை ரேஷன் கடைகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக தனியார் லாரிகள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிளஸ் 2 கணினி தேர்வுக்கு கூடுதல் மதிப்பெண்ணா?? வினாத்தாள் குளறுபடியால் ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!
இந்த வாகனங்களுக்கு பதிலாக தமிழக அரசின் வேளாண் கடன் சங்கங்கள் வழியாக புதிய லாரிகள் வாங்கப்பட்டு, அதனை ரேஷன் கடைகளுக்கு பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடகைப்பணம் குறைக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு வருமானம் ஈட்ட முடியும் எனவும், ரேஷன் பொருட்கள் திருடு போவது தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.