தற்போது மாலத்தீவுகளில் தனது விடுமுறை நாட்களை கொண்டாடி கொண்டு இருக்கும் நடிகை சமந்தா லேட்டஸ்டாக ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகினை வர்ணித்து வருகின்றனர்.
கியூட் நடிகை சமந்தா:
தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை க்யூட்டாக இருக்கும் நடிகைகளை தான் அதிகமான விரும்புவர். அதிலும் குறும்புத்தனத்துடன் கூடிய யதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தும் நடிகைகளை தான் ரசிகர்கள் விரும்புவர். அந்த வகையில் அனைவரையும் தனது கியூட் எக்ஸ்பிரேசன் வாயிலாக ஈர்த்தவர், நடிகை சமந்தா. கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் சென்னையில் வளர்ந்ததால் தன்னை தமிழ் பெண் என்றே வெளிப்படுத்திக்கொள்வார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
கடந்த சில வருடங்களுக்கு முன்னால் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான “விண்ணை தாண்டி வருவாயோ” என்ற திரைப்படத்தில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், அந்த படத்தின் தெலுங்கு ரீமேகில் நடிகர் நாகசைதன்யாவுடன் நடித்தார். அதில் மிகவும் அழகாக தனது நடிப்பினை வெளிப்படுத்தியதால் பல விருதுகளையும் ரசிகர் கூட்டத்தினையும் சம்பாரித்தார்.
லேட்டஸ்ட் புகைப்படம்:
அதன் பின், பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களை தந்து முக்கியமான கதாநாயகியாக இருந்து வந்தார். திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். பொது முடக்கத்தின் போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த சமந்தா தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
இந்திய விமான துறையில் 368 காலிப்பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!!
அதில் சில நாட்களாக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், தற்போது தான் கியூட்டாக இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக no bikini shoot…thats all folks என்று பதிவிட்டுள்ளார்.
இனி பிகினி ஷூட் கிடையாது என்று தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் கியூட்டாக இருப்பதால் அவரது ரசிகர்கள் அவரது அழகினை வர்ணித்து வருகின்றனர். இனி பிகினி ஷூட் கிடையாது என்று கூறி இருப்பதால் சில ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.