‘என் வாழ்க்கையில் பாலியல் தீண்டல் ரொம்ப நடந்து இருக்கு’ – நடிகை ரெஜினா ஓபன் டாக்!!

0

கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ரெஜினா தற்போது அவர் வாழ்க்கையில் அனுபவித்த பாலியல் சீண்டல்களை அப்படியே ஓபன்னாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ரெஜினா வாழ்க்கையில் நடந்த கசப்புகள்

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் ரெஜினா முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்த இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார் பட்டி சிங்கம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஒரு பேட்டி ஒன்றில் இவர் அனுபவித்த தர்மசங்கட்டமான பாலியல் சீண்டல் குறித்து பேசியுள்ளார். திரையுலகில் புதிதாக அறிமுகமான சமயத்தில் அட்ஜஸ்மென்ட் பண்ணுவிங்களா என கேட்டுள்ளதாகவும், உடனே ரெஜினா பயத்தில் அவர்களுடன் இணைப்பை துண்டித்தாகவும் கூறியுள்ளார்.

அது மட்டும் அல்லாமல் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் ஒருவர் என் உதட்டை பிடித்து இழுத்துவிட்டு எதுவுமே நடக்காத மாதிரி சென்று விட்டார். என்னை போல பல பெண்களும் தினம் தினம் பாலியல் சீண்டல்களை சந்தித்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்களுடன் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here