இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் ரீமாசென். மின்னலே திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் இளம் ரசிகர்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிய தொடங்கியது. அதிலும் இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.
இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வந்த இவர் 2012 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதிகளுக்கு மகன் உள்ளார். இந்நிலையில் ரீமா சென் தனது கணவர் மற்றும் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் பல இளைஞர்களின் மனதில் இன்றும் கனவு கன்னியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரீமா சென்னுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா என பலரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.