இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த அண்மையில் வெளியான அனிமல் திரைப்படம் வசூலில் கல்லா கட்டி உள்ளது. இப்படி அடுத்தடுத்து தனது கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது விஜய் தேவரகொண்டாவுடன் இவர் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் விஜய்க்கும் தனக்கும் இருக்கும் உறவு குறித்து ராஷ்மிகா மந்தானா ஓப்பனாக பேசினார்.அதாவது நானும் விஜய்யும் ஒன்றாக தான் வளர்ந்தோம். என் வாழ்க்கையில் நான் எது செய்தாலும் அவருடைய யோசனையை கேட்டு தான் செய்வேன். என்னுடைய வாழ்க்கையில அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். மேலும் மற்றவர்களை விட தனிப்பட்ட முறையில் அவர் என்னை நிறைய ஆதரித்துள்ளார் என கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
PM கிசான் திட்ட விவசாயிகளே.., 16 வது தவணை இந்த தேதியில் தான் செலுத்தப்படும்.., வெளியான அறிவிப்பு!!!