தென்னிந்திய நடிகைகளில், டாப் ஹீரோயினாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த அனிமல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 800 கோடிக்கு மேல் குவித்து வசூல் சாதனை படைத்துள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் முதல் பார்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பார்ட் 2 க்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் அவர் குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்ற விமானம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக அரை மணி நேரத்தில் தரையறுக்கப்பட்டது. இந்த விமானத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் புகைப்படத்தை பதிவிட்டு இன்று நாம் மரணத்திலிருந்து தப்பித்தோம் என்று தெரிவித்துள்ளார்.