டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்.., மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!!!

0

மத்திய அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

இதனால் ஒரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சர்கள் இன்று நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனால் இதில் விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here